Swami Thirunaksataram

Updated on July 23, 2020 in Acharyas

Srimathe Ramanujaya Namah! Sri Sriranga Narayana Jeeyar Swamigal Thiruvadigale Saranam! Sri Velukkudi Swamigal Thiruvadigale Saranam! 

Adiyen received this message thru Whatsapp. Adiyen doesn’t know if tomorrow is Swami’s Thirunaksatram but if it’s so, even though adiyen doesn’t have the age to wish our Swami, adiyen wishes to offer managalasasanams to our Swami. Also received this vazhi thirunamam for our swami was amazing, so sharing here. 

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ🙏🙏🙏.

நம் குடி வாழ, வழி சொல்லும் வேளுக்குடி ஸ்வாமிகள்
🙏👌🔔🥇🌺🌻🌹🏵🙏
நாளை(23/07/2020) ஆடி மகம்.
பால வாக்அம்ருதவர்ஷி, ஸ்ரீராமாநுஜ சேவா ஸ்ரீ, சொல்லின் செல்வர், ஸ்ரீவைஷ்ணவப் பேரொளி ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் திருநட்சித்திரம்!!!

இருள்தரு மாஞாலத்தில், இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்த, அடியேனைத் திருத்திப் புவியில் ஒரு குறும் பொருளாக்கிய,மகானுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்!

நம்மை வாழ வைக்கும் வள்ளலுக்கு ஒரு வாழ்த்துப்பா!!

“எம்பெருமானார் தர்சனம் தழைக்க வந்தார் வாழியே!
நம்பெருமாள் வைபவம் நாநிலத்தோர் அறிய வைத்தார் வாழியே!
மேம்பொருளையும் மென்மைத் தமிழில் உரைத்தார் வாழியே!
எம்மிடர் கடிய சாத்திரங்களின் சாரத்தை அருளும் வள்ளல் வாழியே!

திவ்ய தேச யாத்திரையை திண்ணம் செய்தார் வாழியே!
அவ்வயோத்தியையும்,கோகுலத்தையும் பக்கத்து ஊராக்கினார் வாழியே!
வையமெங்கும் வைணவத்தை வளர்க்கும் பேரறிஞர் வாழியே!
தெய்வத்துள் தெய்வம் இவர் என்று காட்டிய தேவர் வாழியே!

தொலைக்காட்சியில் தொல்லுலகம் காண்பித்தார் வாழியே!
அலைக்கற்றையில் ஆழ்வார் அமுதம் அள்ளித்தந்தார் வாழியே!
அலைபேசியில் ‘என்பணி’யை உணர்த்தினார் வாழியே!
கலை,காட்சியை விட்டு, கலையிலங்கு மொழியைக் கற்க வைத்த காருண்யர் வாழியே!

சிறுதுளியால்(கிஞ்சித்) பெருவெள்ளம்(பாகவத கோஷ்டி) பாய்வித்தார் வாழியே!
அருளிச்செயல் அமுதம், அகிலமெங்கும் சொல்லும் நம்கால நாதமுனிகள் வாழியே!
இருள்தருமா ஞாலத்தைக் கடக்க அருள்நெறி காட்டினார் வாழியே!
கருவி நின்றோரையும், உருகச் செய்த உத்தமர் வாழியே!

தேடிச் சென்று செகமெல்லாம் ஞானவேள்வி செய்தார் வாழியே!
நாடிக் கைங்கர்யம் புரியக் களம் தந்தார் வாழியே!
ஆடிப்பாடி அநுயாத்ரையில் அந்வயிக்கச் செய்யும் அநு ராமாநுஜர் வாழியே!
ஆடி மகத்தில் அவதரித்த அருளாளர் வாழியே!!

ஊழிமுதல்வன் குணங்களை உகந்துரைத்தார் வாழியே!
சோளிங்கர் தொட்டாசார்யர் சுவாமியின் சீர்மிகு சீடர் வாழியே!
வேளுக்குடி வரதாசார்யர் சுவாமியின் அருந்தவப் புதல்வர் வாழியே!
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி புகழ் வாழி!வாழி!!வாழியே!!! “

(–அடியேன் தாசானுதாசன்)

 
  • Liked by
Reply

கோடன கோடி நமஸ்காரங்கள் ஸ்வாமி! இவ்வளவு அழகான வாழி திரு நாமம்!!! மனம் பூரிக்கிறது! பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல!

அடியேன் தாசன்.

  • Liked by
Reply
Cancel
0 on July 23, 2020

Blissful experience Swamy
Adiyen

  • Liked by
Reply
Cancel
0 on July 23, 2020

Srimate Ramanujaye Namaha!

Dhanyosmi swami for sharing the information. The vaazhi song is well composed.

Lets be thankful for all the services that swami has provided us via enpani, yatras, and as well as this forum and pray that such services continue for many more generations.

Is there a line in the vaazhi referring to swami’s active participation in this forum?

Adiyen

 

 

  • Liked by
Reply
Cancel