பக்தன் கடவுளை சோதித்த கதை

Updated on July 7, 2020 in General
0 on July 7, 2020

ஸ்ரீ மதே வேதாந்த இராமானுஜ மஹா தேசிகாய நம:
பக்தன் கடவுளை சோதித்த கதை தெரியுமா?

திருக்குடந்தை ஆண்டவன் அருளிய ஸ்ரீமத் இராமாயண உபன்யாசம்

பொதுவாக கடவுள் தான் பக்தனை சொதிப்பான்

ஆனால் கடவுளை பக்தன் சோதித்த கதை இது

சுகிரீவனுக்கு பயம் தொற்றி கொண்டது . ஸ்ரீ ராமனை பார்த்து கேட்கிறார்

ஹே ராமா உன்னால் துந்துபி ராக்ஷஸனின் எலும்பை உதைக்க முடியுமா?

இராமன் தன் திருவடி விரலால் தூக்கி எறிந்து விட்டார்

இலக்குவன் தன் தலையில் அடித்து கொள்கிறான் . ஒரு குரங்கு போய் நம் அண்ணாவை சோதிக்கிறது என்று

நாம் ஸ்ரீமத் இராமாயணத்தை பல முறை படித்திருப்போம்

இந்த கோணத்தில் படித்ததுண்டா ?

நம் ஆசார்யன் மட்டுமே நமக்கு புரிய வைக்க முடியும்

சுகிரீவன் சந்தேக பட்டது சரியா ? என்றால் அவன் வாலி யின் (அதாவது இந்த சம்சாரதின்) வலிமையை (ஆழத்தை) கண்டு இருக்கிறான்

கடவுளை கண்டதில்லை . கடவுளின் வலிமையை கண்ட உடன் அவன் மீது நம்பிக்கை வந்து விடுகிறது

அவனுக்கே அடிமை செய்கிறான். இந்த பிறப்பு இறப்பை ஜெயித்து விடுகிறான்

அடியேன்

 
  • Liked by
Reply