திருவை மற்றும் சந்தை சொல்லும் முறை பற்றிய சந்தேகம்

Updated on February 11, 2021 in Daily rituals and practice
0 on February 11, 2021

அடியேனுக்கு ஒரு சந்தேகம்.

அடியேன் தினமும் திவ்யப்ரபந்தம் சந்தை மற்றும் திருவை சொல்லி வருகிறேன். சந்தையை மாலையிலும், திருவையை காலையிலும் அனுசந்தித்து வருகிறேன். அடியேன் லௌகீக வாழ்க்கை சூழலில் இருப்பதால், நேரம் குறைவாக உள்ளது. அதனால், திருவை மற்றும் சந்தை சொல்லும் போது அடியேன் ஸ்வருபாமாக எழுந்தருளி நித்யகர்ம அனுஷ்டானங்களையும் மற்ற முன் நிபந்தனைகளையும் முடித்து விட்டு சொல்வது மிக கடினமாக உள்ளது.

தேவரீர் திருவை மற்றும் சந்தை சொல்லும் வழியையும் மற்றும் முன்நிபந்தனைகளையும் சேவிக்குமாறு பிரார்த்திக்கிறேன்.

அடியேன் ராமானுஜ தாசன்.

 
  • Liked by
Reply