திதி கொடுப்பது பற்றிய சந்தேகம்

Updated on February 11, 2020 in Daily rituals and practice
5 on February 10, 2020

நமஸ்காரம் ஐயா. எனக்கு ஒரு சந்தேகம் . உங்களின் பதில்தான் எனக்கு தெளிவு பெற செய்யும் என்று நம்புகிறேன். எனக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தார். ( 2015இல் மூளையில் கட்டி வந்தது டெஸ்ட் செய்து பார்த்ததில் brain கேன்சர் என்று சொல்லிவிட்டார்கள். நான்கு வருட போராட்டத்திற்கு பின்பு போன வருடம் தை மாதத்தில் இறைவன் அவளை அழைத்துக் கொண்டார்). இப்பொழுது ஒரு வருடம் ஆகிவிட்டது. வருகின்ற புதன்கிழமை அவள் இங்கிருந்து கிளம்பிய திதி நாள் வருகிறது அன்று அவளுக்கு எப்படி சாமி கும்பிடுவது. சிலரிடம் கேட்டால் ஆன்மாவாக இவ்வுலகில் பிறப்பு எடுத்துவிட்டால் வருடா வருடம் திதி கொடுத்து தான் ஆக வேண்டும் என்கிறார்கள். ஒரு சில பேர் அந்தக்குழந்தை ,பெரிய பெண் ஆகாததால் இறைவனடி சேர்ந்து இருப்பாள் திதி கொடுக்க கூடாது(பிண்டம் வைத்து) என்கிறார்கள். ஒரு சில பேர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றுங்கள் என்கிறார்கள். எந்த முறையில் அவளை வணங்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை நீங்கள் பதில் கூறுங்கள். அப்படியே திதி கொடுப்பதாக இருந்தால் சொந்த வீட்டில் தான் கொடுக்க வேண்டுமா இல்லை ஆற்றிலோ குளத்தங்கரை யிலோ கொடுக்க வேண்டுமா. (அவள் போன துக்கத்தில் நாங்கள் இருந்த வீட்டைவிட்டு வாடகை வீட்டில் குடியேறி விட்டோம் அதனால் கேட்கின்றோம்.)உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா.
இந்த ஒரு வருட காலமாக தங்களின் பேச்சை கேட்டு தான் ஆன்மா என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டு தினமும் யூடியூப் வழியாக உங்களின் உபன்யாசங்கள் எல்லாம் கேட்டு கொண்டு எதோ பொழுதை கழித்து கொண்டு இருக்கிறோம்.

இப்படிக்கு
நன்றியுடன்

கணேசன்

 
  • Liked by
Reply
1 on February 10, 2020

ஶ்ரீமதே இராமானுஜாய நமஹ,

நமஸ்காரம் vpgn கணேசன் ஸ்வாமி,

தேவரீரின் குமாரத்தி ஆனதமாக பெருமாள்-தாயார் மடியில் ஸ்ரீவைகுண்டத்தில் (மோக்ஷத்தில்) நித்யவாசம் செய்கிறாள், கவலை கொள்ள வேண்டாம். ஸ்வாமி இராமானுஜரின் கிருபையால் அற்சரார்தி மார்கம் வழியால், தேவரீரின் குமாரத்தி மோக்ஷம் சென்று விட்டாள், மரு பிறவி கிடையாது. இது ஸ்வாமி இராமானுஜர் நம் மேல் கருணை கொண்டு எடுத்து இருக்கும் விரதம்.

இருக்கும் இடத்தில் இருந்தே திதி கொடுக்கலாம். இல்லை என்றால் கோவிலிலோ, ஆற்றங்கரையிலொ, அல்லது கோயில் அர்ச்சகரை விட்டில் அழைத்தொ செய்யலாம்.

இதுவே வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியின் திரு உள்ளம் என்று, அடியேனின் ஆசார்யன் திருவடியில் தண்டம் இட்டு கூறுகிறேன்.

????
அடியேன் ஸ்ரீனிவாச (தொட்டயாசார்ய) தாசன்

on February 11, 2020

Correction on typing error.

It is ஆனந்தமாக (not ஆனதமாக)

தேவரீரின் குமாரத்தி ஆனந்தமாக பெருமாள்-தாயார் மடியில் ஸ்ரீவைகுண்டத்தில் (மோக்ஷத்தில்) நித்யவாசம் செய்கிறாள்.

????

Show more replies
  • Liked by
Reply
Cancel
0 on February 11, 2020

???

  • Liked by
Reply
Cancel
0 on February 11, 2020

தங்களின் பதில் பெருமாளே நேரில் வந்து சொல்வது போல உணர்கிறோம்
மிக்க நன்றி
???

  • Liked by
Reply
Cancel
0 on February 11, 2020

Adiyen Charamavathi Dasan ? Ganeshan Swami.

All due to Swami Ramanujar Karunai who is ThiruvAdi of Swami NamAlwar as our Acharyas/Velukkudi Swami always say. Adiyen is only a Karuvi/Tool sharing their Karunai to  to all ???

 

 

????

Adiyen Srinivasa (DhoddayAcharyar) Dasan

  • Liked by
Reply
Cancel