ஒரு வருடகாலத்திற்கு நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய கர்ம சந்தேகம்

Updated on June 16, 2021 in Karma
2 on June 13, 2021

ஐயா வணக்கம். எங்கள் தந்தை இறந்து 30 நாட்கள் ஆகிவிட்டது. ஒரு வருடகாலத்திற்கு நாங்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாத செயல்களை (வீட்டில் குறிப்பாகச் சாமிக்கு நெய்வேதனம் செய்யலாமா, பதிகம் படிக்கலாமா, கோவிலுக்கு பூ போன்றவை கொடுக்கலாமா)தாங்களே எங்களுக்கு விளக்க வேண்டும். எங்களுக்கு வழிநடத்த மூத்தோர்கள் யாரும் கிடையாது. தாங்கள் கூறும் பதிலைக் பின்பற்றுவதற்கு சைவம், வைணவம் என்பதில் வேறுபாடு உண்டா அல்லது அனைவருக்கும் பொதுவானதா என்பதை தாங்களே எங்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி

 
  • Liked by
Reply

சிவதொண்டின் ப்ரவீன் அவர்களுக்கு நமஸ்காரம்.

தங்கள் தந்தையை பிரிந்ததற்க்கு அடியேனின் இரங்கள்.

முன்னம் ஒரு முறை ஒரு வாசகர் தங்கள் கேள்வியை ஒத்து கேட்டிருந்தார். அதற்கு ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமி அவரவர் வீட்டு ப்ரோகிதரை கேட்பதே சிறப்பு; அவர்களே மிக நுனுக்கமான விவரங்களுடன் தங்களை வருடம் முழுவதும் வழி நடத்த இயலும் என்று பதில் அளித்திருந்தார்.

அப்படி அல்லாமல் இவர் ஒன்று கூறி, அது ப்ரோகிதர் கூறுவதற்கு முரண் போல் தோன்றுமேயானல் அது தங்களுக்கு பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.

பணிவன்புடன்

அடியேன் தாசன்.

 

  • Liked by
Reply
Cancel
0 on June 16, 2021

கம்பன்தாசன் அவர்களுக்கு வணக்கம். எங்களின் சந்தேகத்திற்கு தாங்கள் பதில் அளித்தமைக்கு அடியேனின் பணிவான நன்றி.இப்படிக்கு சிவத்தொண்டன் பிரவீன்.

  • Liked by
Reply
Cancel