ஈசுவரன் பிரஹ்மம் இரண்டும் ஒன்றா?

Updated on July 7, 2020 in Avatars
0 on July 7, 2020

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri Velukkudi Ranganathan Swamy Thiruvadigaley Sharanam

Sri:

கல்யாண குணங்கள் உள்ளதால் அவன் ஈசுவரன்

குணங்கள் அற்றவன் பரஹ்மம்

என்று அத்வைதிகள் கூறுகிறார்களே

குணங்கள் அற்ற ப்ரஹ்மம் எப்படி படைக்கும்?

பாவதினால் .(Bhaavam not paavam) படைப்பு என்றால் பாவமும் ஒரு குணம் தானே?

குணங்கள் உள்ள ஈஸ்வரனை உபாசித்து குணங்கள் அற்ற பிரம்மம் ஆகிறான்

மோக்ஷம் குடுத்து பெரும் வியாபாரம் அல்ல

என் கேள்வி எதற்கு நிற்குணமாக மாற வேண்டும்?

இல்லாமயின் இருப்பிடத்தில் ஏது

ஸத் + சித் + ஆனந்தம் ?

நிர்குண பிரஹ்மதிடம் இந்த மூன்றும் உள்ளதா இல்லையா? இது விசேஷனங்கள் என்று சொல்ல முடியுமா முடியாதா?

குணாதீதன் அவன் என்று சொன்னால் குணங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று பொருள்

ரஜ + தம + ஸத்

ஆனால் கல்யாண குணங்கள் இருக்கிறதே

எனக்கு ஒன்று தான் புரியவில்லை மாயைக்கு அவனே காரணம் என்றால் அவனே அவன் மாயயை விலக்கி கொள்கிறானோ ?

அதை கண்ணன் வந்து அர்ஜுனனுக்கு விலக்க வேண்டுமா அல்லது அர்ஜுனன் தானே விலக்கி கொள்ள வேண்டுமா?

Daasaanudaasan

 
  • Liked by
Reply