இன்று நம் சுவாமியின் ஷஷ்டியப்த பூர்த்தி & திருநட்சத்திரம்

Updated on August 21, 2023 in Acharyas
3 on August 17, 2023

நம் குடி வாழ, வழி சொல்லும் வேளுக்குடி ஸ்வாமிகள் 🙏👌🔔🥇🌺🌻🌹🏵🙏

இன்று(17/08/2023) ஆடி மகம்.

பால வாக்அம்ருதவர்ஷி, ஸ்ரீராமாநுஜ சேவா ஸ்ரீ, சொல்லின் செல்வர், ஸ்ரீவைஷ்ணவப் பேரொளி
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் ஷஷ்டியப்த பூர்த்தி திருநட்சத்திரம் !

1.வேளுக்குடி ஸ்வாமிகள் மணி விழா — சிறப்பு வாழித் திருநாமம்
🙏🔔🥁🎺🌺🌹👌👍☘🙏

நாடும் நகரமும் நன்கறிய, நாலாயிரமும்
உரைத்தார் வாழியே !

வீடு பெறும், எம்பெருமானார் தரிசனம்
விவரித்தார் வாழியே !

நாடெங்கும் திவ்ய திருப்பதிகள், சேவிக்க
வைத்தார் வாழியே !

ஏடு உறை தத்துவங்களை, இணைய அலையில் அருளினார் வாழியே !

ஆடி மகத்தில் உதித்த, அருளமுதக்
கொடையாளர் வாழியே !

தேடி,செகம் முழுதும் ஞானவேள்வி
செய்தார் வாழியே !

பீடுற மணிவிழா,காணும் சொல்லின் செல்வர் வாழியே !

ஈடு இணையற்ற வேளுக்குடி ஸ்வாமிகள்
பல்லாண்டு வாழியே !!!

2.பொதுவான வாழித் திருநாமம் !!!
….💐🌸🏵🌹🌼🌻🌺⚘🌷💐

“”எம்பெருமானார் தர்சனம் தழைக்க வந்தார் வாழியே!
நம்பெருமாள் வைபவம் நாநிலத்தோர் அறிய வைத்தார் வாழியே!
மேம்பொருளையும் மென்மைத் தமிழில் உரைத்தார் வாழியே!
எம்மிடர் கடிய சாத்திரங்களின்
சாரத்தை அருளும் வள்ளல் வாழியே!

திவ்ய தேச யாத்திரையை திண்ணம் செய்தார் வாழியே!
அவ்வயோத்தியையும்,கோகுலத்தையும் பக்கத்து ஊராக்கினார் வாழியே!
வையமெங்கும் வைணவத்தை வளர்க்கும் பேரறிஞர் வாழியே!
தெய்வத்துள் தெய்வம் இவர் என்று காட்டிய தேவர் வாழியே!

தொலைக்காட்சியில் தொல்லுலகம் காண்பித்தார் வாழியே!
அலைக்கற்றையில் ஆழ்வார்
அமுதம் அள்ளித்தந்தார் வாழியே!
அலைபேசியில் ‘என்பணி’யை
உணர்த்தினார் வாழியே!
கலை,காட்சியை விட்டு, கலையிலங்கு மொழியைக் கற்க வைத்த காருண்யர் வாழியே!

சிறுதுளியால்(கிஞ்சித்)
பெருவெள்ளம்(பாகவத கோஷ்டி) பாய்வித்தார் வாழியே!
அருளிச்செயல் அமுதம்,
அகிலமெங்கும் சொல்லும் நம்கால நாதமுனிகள் வாழியே!
இருள்தருமா ஞாலத்தைக் கடக்க அருள்நெறி காட்டினார் வாழியே!
கருவி நின்றோரையும், உருகச் செய்த உத்தமர் வாழியே!

தேடிச் சென்று செகமெல்லாம்
ஞானவேள்வி செய்தார் வாழியே!
நாடிக் கைங்கர்யம் புரியக் களம்
தந்தார் வாழியே!
ஆடிப்பாடி அநுயாத்ரையில் அந்வயிக்கச் செய்யும் அநு ராமாநுஜர் வாழியே!
ஆடி மகத்தில் அவதரித்த அருளாளர் வாழியே!!

ஊழிமுதல்வன் குணங்களை
உகந்துரைத்தார் வாழியே!
சோளிங்கர் தொட்டாசார்யர்
சுவாமியின் சீர்மிகு சீடர் வாழியே!
வேளுக்குடி வரதாசார்யர்
சுவாமியின் அருந்தவப் புதல்வர் வாழியே!
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி புகழ் வாழி!வாழி!!வாழியே!!! “

credits: (பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

ஷேம, தைரிய, வீர்ய, விஜய, ஆயுர், ஆரோக்கிய, ஜஸ்வர்யம், ! தீர்க்காயுஷ்மான் பவ !! எம்பெருமானார் கிருபாகடாஷத்துடன் மனமகிழ்ச்சியாக பல்லாண்டு பெருவாழ்வு வாழ்க 💐 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 🎂 ஆச்சாரியன் ஆசீர்வாதம், பகவத் அனுகிரகம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்🙏 நமஸ்காரங்கள் 🙏🙏

அடியேன்,
பத்ரி நாராயண ராமாணுஜ தாசன். 

 
  • Liked by
Reply
0 on August 18, 2023

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thriruvadigaley Sharanam

Dasanudasan

  • Liked by
Reply
Cancel
0 on August 18, 2023

அடியேன்
This vazhi thirunamam line pinching me that in sadhu’s life also has to come across enemy

கருவி நின்றோரையும், உருகச் செய்த உத்தமர் வாழியே!
If some one share sahsti aptha poorthi invitation for remebrance well appreciated
Dasan

  • Liked by
Reply
Cancel
0 on August 21, 2023

Srimathe Ramanujaya Namaha,
Srimadh Vara Vara Munaye Namaha,
Sri Srinivasa Maha Guruve Namaha,
Swami VedhanthacharyAr Thiruvadigalaey Sharanam,
Swami KumaraSingharacharyAr Thiruvadigalaey Sharanam,
Swami KumaraDhoddayacharyAr Thiruvadigalaey Sharanam,
Velukkudi Sri Krishnan Swami Thiruvadigalaey Sharanam.
🙏

  • Liked by
Reply
Cancel