Updated on June 1, 2022 in General
3 on May 31, 2022

நமக்கு நல்லது நடந்தால் எல்லாம் பகவான் செயல் என்கிறோம் ஆனால் எதுனா கெட்டது நஞன்தால் நாம் செய்த பாபம் என்கிறோம். பசங்களுக்கு விளக்கம் சொல்ல தெரியலை. தெளிய படுத்த பிரார்த்தனை 🙏🙏🙏🙏🙏🙏

 
  • Liked by
Reply

நமஸ்காரம் அம்மா,

நமக்கு ஏதாவது நல்லது நடந்தால், அது பின்வரும் காரணங்களால் தான்:

1. நாம் செய்த புண்ணிய கர்மா.
2. வரம்.

இதேபோல், நமக்கு ஏதாவது கெட்டது நடந்தால், அது பின்வரும் காரணங்களால் இருக்கலாம்:

1. நாம் செய்த பாப்ப கர்மா.
2. சாபம்.

நமக்கு ஏதாவது நல்லது நடந்தால், கடந்த காலத்தில் ஏதாவது புண்ணிய கர்மா செய்ததற்காக நமக்கு சரியான மனதையும், புத்தியையும், உடலையும் கொடுத்த பகவானுக்கு நன்றி செலுத்துகிறோம்.

அதேசமயம், நமக்கு ஏதாவது தீமை நேர்ந்தால், மனம், புத்தி, உடலைச் சரியாகப் பயன்படுத்தாதது நம் தவறு. அதனால் பாபம் வந்திருக்கும். ஆகவே நமக்கு ஏதாவது கேடு நிகழ்ந்தால் அது பகவானின் தவறல்ல. பகவான் கொடுத்த வளங்களை தவறாக பயன்படுத்தினோம். அதுவே காரணம்.

மேலும் வரம் மற்றும் சாபம் கொடுக்கிற நபரைப் பொறுத்தது. கொடுப்பவர் பகவானாகவும் இருக்கலாம். இது கொடுப்பவரை திருப்திப்படுத்துகிறோமா அல்லது அதிருப்திபடுத்திகிறோமா என்பதைப் பொறுத்தது.

அடியேன் இந்த பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

அடியேன் தாஸன்.

on June 1, 2022

Very nicely expressed.
Adiyen

Dhanyosmi Enpanifan swami.

adiyen dasan.

Show more replies
  • Liked by
Reply
Cancel