கூரத்தாழ்வான் கூறியது நடக்குமா?

Updated on June 7, 2021 in Acharyas
0 on June 7, 2021

ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளுக்கு அடியேனுடைய நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களுக்கும் அடியேனுடைய நமஸ்காரம்.

கூரத்தாழ்வான் இவ்வுலகத்திருந்து புறப்படும் போது, இராமானுஜரிடம், தான் முன்னதாக வைகுந்தம் சென்றால் தான், உடையவர் அங்கு வரும்போது தனது ஆச்சார்யன் என்ற முறையில் அவரை வரவேற்க முடியுமென கூறி புறப்படுகிறார்.

அப்படி என்றால், வைகுண்டம் சென்ற பிறகும் நாம் பூமியில் எடுத்த பிறவிகள் ஞாபகம் இருக்குமா? அப்போது தானே தன் கடைசி பிறவி ஆச்சார்யைண வைகுண்டத்திலும் அடையாளம் காண முடியும்?

அடியேன் இராமானுஜ தாஸன்.

 
  • Liked by
Reply